AruN Admin
Posts : 1961 Join date : 2012-01-26
| Subject: ~~பார்த்தேன், ரசித்தேன்...~~ Fri May 18, 2012 2:10 pm | |
| பார்த்தேன், ரசித்தேன்... கம்பீரமான மலைப் பார்த்து ரசித்தேன் அதன் உறுதியை நினைத்து மலைத்தேன் ஆனால் மனிதன் அதனை உடைப்பதை தெரிந்து சலித்தேன்.
அகலமானக் கடலைப் பார்த்து ரசித்தேன் அதன் ஆழத்தை நினைத்து களித்தேன் ஆனால் மனிதன் அதனைக் குடைவது தெரிந்து சலித்தேன்.
மெலிதாக வீசும் காற்றைத் தென்றல் என உணர்ந்தேன் அதன் சுகந்தத்தில் எனை மறந்தேன் ஆனால் மனிதன் அதனை மாசுபடுத்துவதை அறிந்து சலித்தேன்.
ஒளி தரும் தீயை பார்த்து ரசித்தேன் அதன் ஒளியில் கீதைப் படித்தேன் ஆனால் மனிதன் அதனை அழிக்க பயன்படுத்துவதைப் பார்த்து சலித்தேன்.
பரந்த ஆகாயத்தைப் பார்க்க நிமிர்ந்தேன் அதன் எல்லையை அறியமுடியாமல் வியந்தேன் ஆனால் மனிதன் அதன் பாதுகாப்பு உறையைத் துளைப்பதை அறிந்து சலித்தேன்.
செய்வது அறியாமல் திகைத்தேன் ஆனால் இயற்கையைக் காப்பாற்றும் சிலரின் முயற்சியில் மனம் மகிழ்ந்தேன்.
எனக்கும் உதவி செய்ய ஆசைதான் நீங்களும் உடன் இருப்பீர்கள் என எண்ணித்தான் மனம் குளிர்கிறேன். | |
|