AruN Admin
Posts : 1961 Join date : 2012-01-26
| Subject: ~` நம்பிக்கை ஏன் இல்லை? ~~ Sat Jun 09, 2012 2:18 pm | |
| நம்பிக்கை ஏன் இல்லை? லாட்டரிச் சீட்டிலும், பங்கு சந்தையிலும், குதிரை வாலிலும் நமக்கு இருக்கும் நம்பிக்கை, நம் மீது நமக்கு இல்லையே..
தளிர் நடை பழகும் மழலையின் அடுத்த அடி எடுப்பதில் இருக்கும் நம்பிக்கை உடலின் செயல்பாடுகள் குறைந்திருக்கும் பலர் தன் கையே தனக்குதவி என வாழ்வதைப் பார்த்தும் கேட்டும் படித்தும், நம்முள் நம்பிக்கை ஏன் வரவில்லை?
உடலையும், மனதையும் தூய்மையாக வை நாளை நமதே என்று உழை அதுவே நம்பிக்கைத் தரும்.
உன்னையே 'நம்பி' வருபவரைக் 'கை'தூக்கி விடு அவர்கள் வழங்கும் ஆசியில், என்னால் முடியும்' என்னும் நம்பிக்கை துளிர் விடும்.
பிரகலாதனின் நம்பிக்கை, இறைவனை பூமிக்கு வரவழைத்தது நாட்டுத் தலைவர்களிடம் உள்ள நம்பிக்கை பூமிக்கு சுதந்திரம் கொடுத்தது.
ஆனால் உன் மீது உள்ள நம்பிக்கையோ பூமியையே உன் கைப்பிடிக்குள் கொண்டு வரும். | |
|