AruN Admin
Posts : 1961 Join date : 2012-01-26
| Subject: ~~பாழும் மனம்~~ Sun Jun 10, 2012 9:03 pm | |
| பாழும் மனம் அக்னி வளர்த்து
ஆயிரம் பேர் சாட்சியாக
வேத மந்திரங்கள் முழங்க
கெட்டி மேளம் கொட்ட
மஞ்சள் கயிற்றில் கட்டிய
மங்கல நாண் மாயமாய்
மறைந்தங்கு என்றும் மங்காத
பொற்கொடியில்திருமாங்கல்யம்
சங்குக் கழுத்தை அலங்கரிப்பதில்
தவறென்று நினையாமல் அது காலத்தின்
கோலமென்று நினைத்து பொறுத்திருந்தோம்
ஆனால் அதைக்கழட்டி ஆணியில்
மாட்டும் அவல நிலையைத்தான்
அனுமதிக்க மறுக்கிறது
இந்தப் பாழும் மனம்! | |
|