AruN Admin
Posts : 1961 Join date : 2012-01-26
| Subject: ~ ~ ஏழ்மை ~ ~ Fri Jun 15, 2012 1:03 pm | |
| ஏழ்மை "ஆலயம் தொழுவது சாலவும் நன்று " அவ்வையின் வாக்கு நினைவுக்கு வர அன்னை மீனாக்ஷியைக் காணச் சென்றேன்.
காலணியைக் கழற்றி வைக்கையில் கையை யாரோ பற்றத் திரும்பினேன். ஏழ்மையைப் பறைசாற்றும் உருவம் ஏழுவயதிருக்கும் ஒரு சிறுவன் " தர்மம் சாமி... பசிக்குது.... " .
ஒரு கணம் இரங்கினாலும் மறுகணம் உள்மனம் கூடாதென்று உரைக்க உதறித் தள்ளினேன் அவன் கரத்தை.
பக்தியுடன் ப்ராகாரத்தை நான் சுற்ற பக்கத்தில் ஒரு குரல் "ஐயா..."-அவனே.. எரிச்சல் மிக எட்டிப்போட்டேன் நடையை. "தரித்திரம் விடமாட்டேன் என்கிறது... "
சிறுவனின் தொந்தரவால் சிந்தை பக்தியில் லயிக்க மறுக்க ஒருவழியாய் பாதணிகள் வைத்த இடத்தை நான் அடைய பின்னால் அவன் குரல் " ஐயா..."
பழியாய் வந்தது கோபம் ஓங்கிய கையுடன் நான் திரும்புகையில் நீட்டிய கையுடன் அவன் ...... " ஐயா... இந்தாங்க உங்க மோதரம்.. கீழ விழுந்திருச்சு ..." திரும்பிப் பாராமல் நடந்தான் அவன். சிலையாக நின்றேன் நான்.
இல்லாமை எனும் ஏழ்மை அவன் உருவத்தில் அறியாமை எனும் ஏழ்மை என் மனத்தினில். | |
|