AruN Admin
Posts : 1961 Join date : 2012-01-26
| Subject: ~~மனம் திருந்துமா?~~ Sat Jun 16, 2012 1:51 pm | |
| மனம் திருந்துமா? அறிவுரை எனும் அருமருந்தால் மனம் அறவே திருந்துமா ?
பள்ளியில் ஆசிரியர் இல்லத்தில் பெற்றோர் வெளியுலகில் பலப்பல அறிஞர்கள் தெளிவாக உரைத்த அறிவுரைகள் நன்றாக அறிந்திருந்தும் அதை நாம் அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்கிறோமா? பிரச்சினை நம்மை அண்டும் நேரம் அதை நாம் பிரயோகிக்கிறோமா? நல்லவர் மொழிகள் என்றும் நம்மை நல்வழிப்படுத்தும் என்பது நான்மறைத் தீர்ப்பேயாயினும் தீமையெனும் அரக்கன் தேனொழுகப்பேசித் தன்வசம் நம்மை இழுக்கும்போது தெய்வத்தின் நிகரான மேலோர்தம் அறிவுரைகள் தேடிவந்து நம்மைக் காக்குமா ? சரிய நேரும் நம் மனதைச் சமநிலைக்குக் கொணருமா ?
"அறிவுரையால் அடுத்தவரைத் திருத்தவே முடியாது" அறிஞர் ஒருவரின் ஆணித்தரமான கருத்து -இது அறவே பொய்யுமல்ல அப்படியே உண்மையுமல்ல.
நம் மனதில் விழும் அறிவுரைகளை விதைகளாக்கி நம்பிக்கை எனும் நீரூற்றி முயற்சி எனும் உரம் போட்டு செடியாக மரமாக வேரூன்றச் செய்தால் பலன் தானே பழங்களாக நம்மை வந்தடையும் !
மனம் திருந்தும் - மனது வைத்தால் ! | |
|