AruN Admin
Posts : 1961 Join date : 2012-01-26
| Subject: ~~சத்தியமாய் இது சாத்தியமா?~~ Fri Jun 29, 2012 5:45 pm | |
| சத்தியமாய் இது சாத்தியமா? அட .....!
இப்போதெல்லாம் இங்கு
யாரும் யாரையும் ஜெயிப்பதற்காக
வீழ்த்த நினைப்பதில்லை..!
மனசாட்சியை அடகு
வைத்து விட்டு...
மணமகன்கள்- கல்யாண
சந்தையில் விற்பனைக்கு நிற்பதில்லை...!
லட்ச ரூபாய் பணம்-
பார்க்க...தன் ஆடையில் ஏழ்மையை -
காட்ட துணியும்...
அரிதார பெண்களை காணவில்லை...!
அழுக்காகி போன -
தம் மனதை-மறைக்க
வெள்ளை நிற ஆடையில் வலம்வரும்
அரசியல்வாதிகளின் ஆரவாரமில்லை...!
கட்டு கட்டாய் -மகன்
பணம் அனுப்பினாலும்..
போதும்... ஊருக்கு திரும்பிடு-
மருமகளோடு வாழ்ந்திடு...
என சொல்ல தயங்கும் சில
அம்மாக்களின் அடையாளமே இல்லை...!
அட..! எப்படி..இப்படி
எல்லோரும் ஒரே நேரத்தில்
திருந்தி..விட்டார்கள்?!
ஒருவேளை மறுபடியும்
'சுனாமி' பயமோ?...
பக்கத்தில் இருப்பவனை கேட்டால்..
அவன் வாய் திறப்பதாய் இல்லை..! அதே சமயம்...இதோ-
என்னை நோக்கி -
மாலையும் கழுத்துமாய்... .
ஒருவன் வரவும்தான் -
என் மரமண்டைக்கு...
உரைத்தது..!... நான் கடைசியாய் -
தஞ்சம் புகுந்த -இந்த
மயானத்தை ...பொறுத்தவரை
இங்கு அனைவருமே நல்லவர்கள்...!
'திரும்பிய' பின் -திருந்திவிட்ட
'மயான' மனிதர்கள்........!!!! | |
|