கைபேசியின் பயனானது தற்பொழுது மருத்துவ துறையையும் சூழ்ந்துள்ளது. இதன் அடிப்படையில் நோய்களை இலகுவான முறையில் கண்டறிவதற்கு புதிய இலத்திரனியல் கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இக்கருவியானது கைபேசிகளில் இணைத்து பயன்படுத்தக்கூடியவாறும், இலகுவாக எடுத்துச் செல்லக்கூடியவாறும்(Portable) வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த கருவியை ரென்னெசீ எனப்படும் பல்கலைக்கழகம் வடிவமைத்துள்ளதுடன் இதன் மூலம் குருதி மூலம் ஏற்படும் நோய்களையும், புற்றுநோய், அல்சீமர் நோய் போன்றவற்றையும் இனங்காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.