AruN Admin
Posts : 1961 Join date : 2012-01-26
| Subject: ~~இந்த அநியாயத்தை பார்றா~~ Thu Mar 08, 2012 3:38 pm | |
| பாவனா பெயரில் ஒரு மோசடி மரம் செவனேன்னு கெடந்தாலும், காத்து கடனேன்னு அலைகழிக்குமாம். அப்படிதான் ஆகியிருக்கு பாவனாவின் நிலைமை. தானுண்டு, தன் மேக்கப் பாக்ஸ் உண்டு என்று ஏதோதோ லாங்குவேஜில் குப்பை கொட்டிக் கொண்டிருக்கும் அவருக்கு சமீபத்தில் படித்த இணைய செய்தியொன்று அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இவரது படத்தை போட்டோஷாப்பில் லேசாக ஷேப் பண்ணி, வேறொரு பெண்ணாக சித்தரித்துவிட்டார்கள். ஃபேஸ்புக் மூலம் இந்த போட்டோவை காட்டி காட்டியே நார்வே இளைஞர் ஒருவரை நன்றாக கறந்திருக்கிறது ஒரு கும்பல். காதலில் கசிந்துருகிய அந்த அப்பாவியும், "உன்னை நேரில் பார்க்கணும். இலங்கைக்கே வர்றேன்' என்று இந்த போலி பாவனாவை பார்க்க கிளம்பியிருக்கிறார். சட்டென்று உஷாரான கும்பல் உடனே போலிக்கு மலர்வளையம் வைத்துவிட்டது. "திடீர்னு போய் சேர்ந்துட்டா' என்று கதறிய இளம்பெண் ஒருத்தி "நான்தான் அவளோட தங்கை' என்று அறிமுகப்படுத்திக் கொண்டாளாம் அதே பேஸ்புக்கில்.
இதை தொடர்ந்து கறந்த காசுக்கு கணக்கு முடிக்கும் நோக்கத்துடன், இலங்கையிலிருந்து வெளிவரும் உதயன் நாளிதழில் பாவனா போட்டோவை போட்டு இரங்கல் செய்தியும் கொடுத்து விட்டது அந்த கும்பல். அப்புறம்தான் விஷயம் ஊர் உலகத்திற்கு தெரியவந்திருக்கிறது. இது திருத்தப்பட்ட பாவனாய்யா... என்று சம்பந்தப்பட்ட இளைஞருக்கு எடுத்துச் சொன்னார்களாம். இவ்வளவு கதையையும் நிஜ பாவனாவுக்கு தெரியவர, "எண்ட குருவாயூரப்பா" என்று கண்மூடி கவலைப்பட்டாராம். | |
|