Jaya
Posts : 150 Join date : 2013-07-08
| Subject: கண்வளரும் மானிடமே.. Mon Jul 15, 2013 2:54 pm | |
| . கண்வளரும் மானிடமே.. கண்வளரும் மானிடமே.... கட்டில் மேலே தலையணையை கட்டிப்பிடித்தபடி கற்பனை கனவுகள் தினம் கண்டு கண்வளரும் மானிடமே கண்விழித்து காலைதனை பாரீர்
காலை வேளை கதிரவன் கரங்கள் கன்னியாம் மண்ணவளை நோக்கி காதலுடன் பரவ மண்ணவளும் கண்கவர உடுத்தி கண்விரிய வைப்பதை பாரீர்
மொட்டுக்கள் மேல் ஆசை கொண்டு - தென்றல் மென்மையாக தொட்டுச் செல்ல மொட்டவிழ்ந்த மலர்களின் சுகந்தத்தை - தென்றல் மெல்ல மெல்ல தத்தெடுத்துச் செல்ல வண்டினங்கள் மலர்கள் நாடி வண்ணச்சோலைக்குள் புகுந்துவிட வண்டில் மாடு வயல் நோக்கி வரிசையாக நடந்து செல்ல கடலுக்கு சென்ற கணவனை காண மனைவி கடற்கரையில் காத்திருக்க காதல் கணவன் வரவுகண்டு தாமரை கட்டவிழ்ந்திருக்க காகம் தன்இனத்தை களிப்புடனே கூவியழைக்க படரும் கொடியினமோ கிளை பார்த்து படர்ந்து விட - கட்டிவைத்த பசுங்கன்று பால் கறப்பதை நினைப்பூட்ட பள்ளி செல்லும் சிறுவர் பல்துலக்க அடம் பிடிக்க பனிவிழுந்த ரோஜா தன் படைப்பை வியந்திருக்க – நீ மடடும் பஞ்சனையில் தூங்குகின்றாய் பரந்தாம பக்தனே
ஆகாயத்து விண்மீன்கள் ஆதவன் வரவால் உருகிவிழ அது வந்து மண்ணவளில் ஆங்காங்கே மின்னலிட அதோ தெரியும் பால்நிலவு அது தேய்ந்து மறைந்துவிட அதிசயம் தான் பாருங்கள் - ஆகாயம் அசைவற்று தெளிந்திருக்க தெளிந்துள்ள நீலவானம் தெய்வமவன் மேனியை நினைப்பூட்ட – நீ மடடும் பஞ்சனையில் தூங்குகின்றாய் பரந்தாம பக்தனே
சொர்க்கம் தெரியா மானிடமே சொல்லுகின்றேன் கேளுங்கள் சொர்க்கத்தில் இல்லா காட்சிகள் இவை சொற்ப தூக்கம் துறந்தாயானால் சொர்க்கமதை பார்த்திடலாம் சொன்னவற்றை சரி பார்த்திடலாம் | |
|