Jaya
Posts : 150 Join date : 2013-07-08
| Subject: சுகம் சுகம் சுகம் .... Mon Jul 15, 2013 2:57 pm | |
| . சுகம் சுகம் சுகம் .... காலை வேளையில் கண்விழித்து தூங்கினால் காண்பது – ஓர் சுகம்
காதல் கொண்ட பெண்ணின் கண்களை கண்நோக்கினால் காண்பது - ஓர் சுகம் காவல் இருந்து கண் கவர்ந்தவளை காண்பதில் - ஓர் சுகம்
காட்சி கண்ட முனிவன் கண் திறந்து உலகை காண்பதில் - ஓர் சுகம்
மங்கை மனம் மனங்கவர்ந்தவனை ரகசியமாய் மனதுள் ரசிப்பதில் - ஓர் சுகம்
பத்து மாதம் சுமந்தவளுக்கு பச்சிளம் குழந்தையின் பல்லில்லா சிரிப்பு – ஓர் சுகம்
பகலில் வேலை செய்து பழம் சோறு உண்டால் பாற்கடல் அமுதம் உண்ட சுகம்
பனியில் முழ்கிய றோஜா பச்சை பசேல் என்ற புல்வெளி பார்பதில் - ஓர் சுகம்
பக்கத்து வீட்டு மாங்காயை பட்டபகலில் திருட்டாய் பறிப்பதில் - ஓர் சுகம்
தென்னை இளநீரும் தென்றல் இளம் காற்றும் தெவிட்டாத – ஓர் சுகம்
படித்ததெல்லாம் பரீட்சைக்கு வந்தால் காணும் பரவசத்தில் - ஓர் சுகம்
கண்களில் சிறைபிடித்து கவிதையாய் அதை வடித்து காண்பதில் - ஓர் சுகம்
மனம் விரும்பும் பாடலை மனம் கேட்கும் நேரத்தில் மனம் விட்டு பாடுவதில் - ஓர் சுகம்
சிலையை வடிக்கும் கையும் சிலையாகும் கல்லும் சிந்தித்தால் - ஓர் சுகம்
அலை கொண்ட கடலில் ஆழக் கால் புதைய நடந்து அலைவதில் - ஓர் சுகம்
மாலை நேர வானத்தின் மனம் கவர் வர்ணஜாலத்தை மணலில் இருந்து ரசிப்பது – ஓர் சுகம்
நீலநிறத்தோன் விழிகளும் நீண்டு வளர்ந்த கதைகளும் நினைப்பதே – ஓர் சுகம்
என்றும் புன்னகைக்கும் முகம் எதிலும் நன்மையைக்காணும் மனம் எப்பொழுதும் காண்பது சுகம் சுகம் சுகம் | |
|