Jaya
Posts : 150 Join date : 2013-07-08
| Subject: தெரிந்ததா உங்களுக்கு..... Fri Jul 26, 2013 2:35 pm | |
| . தெரிந்ததா உங்களுக்கு..... இருளில் …
அவள் அழகெல்லாம் எங்கோ ஒழிந்து இருக்க
அவன் வருகைக்காக அவள் அங்கமெல்லாம் காத்திருக்க
அதிகாலை நேரம் அவள்மேல் கொண்ட காதலால்
அவள் எழில் காண அவன் விளைகின்றான்
பச்சை நிற ஆடை பார்க்க தெவிட்டவில்லை
அவனுக்கு
அதிலே பதித்த முத்துக்களாய் பனித்துளிகள்
அழகை கூட்டின அவளுக்கு
அவள்
அங்கமெல்லாம் பூத்துக்குலுங்கி
அவன் வரவை
ஆவலுடன் வரவேற்றன
ஆங்கங்கே பரந்த இளமையும்
அவளில் தோன்றிய நறுமணமும்
அவனை கிறுங்க செய்தன
அணங்கவள் ஆடையின் அழகால்
அவனுள் வெப்பம்
வெப்பமது மேலோங்க
வேண்டுவன பெற்றாள் அவள்
ஆசை தீரும்வரை அருகிருந்தவன்
அந்தி வர அவனுள் ஓர் கோபம்
கோபத்தால் சிவந்தது தேகம்
அவன் கோபத்தின் விளைவு
அவள் மேனியிலும் தெரிந்தது
சிவந்திருந்தவன் தேகம் கண்டு
செய்வதறியாது திகைத்த மாது
இருண்டுவிட்ட இதயத்தோடு இருந்துவிட்டாள்
அவள்
இருண்டுவிட்ட வதனம் கண்டும்
இரக்கமது சிறிதுமின்றி
சினத்தின் விளைவாய் சென்றுவிட்டான் அவன்
அவன் கோபம்
எதனால் ?
என்ன பிழை செய்தாள்
அவள்
அனுதினமும் நடக்கும் விளையாட்டு
அலுக்கவில்லை அவனுக்கு
அவளது இருள் படிந்த வதனம்
அவனுக்கு தினமும் வேணும் போலும்
ஊடலுடன் அவன் செல்ல
அவளும் இருண்டுவிட
மீண்டும்
அவனும் வருவான்
அவளும்
எல்லாம் மறந்து சேர்ந்திருப்பாள்
இருவரும் கலந்திருப்பர் பின்
இருவரும் பிரிந்திடுவர்
இதில் ஓர் சந்தோசம்
இந்த இருவருக்கும்
அன்பு என்பது இதுதானா
இல்லை ஈர்ப்பா ?
இல்லை காதலா ?
இல்லை தங்கி வாழ்வதாலா ?
எதுவும் புரியவில்லை எனக்கு
புரிந்ததா உங்களுக்கு
தெரிந்தால் சொல்லுங்கள் | |
|