Jaya
Posts : 150 Join date : 2013-07-08
| Subject: தொந்தி வயிற்று நாயகனே... Fri Jul 26, 2013 2:40 pm | |
| . தொந்தி வயிற்று நாயகனே... பாருக்கு பாரதத்தை பாட்டெழுதி தந்தவனே
பாலுடன் தேன் கலந்து பாட்டியம்மா தந்தவுடன்
முத்தமிழ் மூன்றையும் மூதாட்டிக்கு கொடுத்தவனே
முத்தமிழே முழுஉலகும் நலம் வாழ முன்னின்று அருள்வாயே
மாபாரதம் எழுத மருப்பொன்று ஒடித்தவனே
மாதா போல் பெண் இல்லாமல் மரத்தின் கிழ் இருப்பவனே
மலங்களில் கட்டுப்படா மங்கள நாயகனே
மனம் என்னும் கோயிலினுள்ளே மங்களதீபமேற்றிடுவேன்
மன்னவா மனதில் நிம்மதியை தருவாயே
தொந்தி வயிற்று நாயகனே – முருகனுக்கு
முந்தி வந்து உதித்தவனே – எல்லா
சந்தியிலும் வந்தமர்ந்து சஞ்சலங்கள் தீர்பவனே
மந்தி போல் இருக்கும் எம்க்கு மறக்காமல் அருள்
தாருமையா | |
|