Jaya
Posts : 150 Join date : 2013-07-08
| Subject: யாசகம் கண்டேன்..... Mon Jul 29, 2013 3:17 pm | |
| . யாசகம் கண்டேன்..... கண்கள் வழி கவிகள் கண்டேன்
காவிய வழி காதல் கண்டேன்
திங்கள் மதி முகத்தை கண்டேன்
தீண்டச் சொல்லும் இதழை கண்டேன்
தங்கமது உந்தன் மேனியில் கண்டேன்
தழுவச் சொல்லும் அழகை கண்டேன் - என்மேல்
மன்மதன் தொடுக்கும் பாணம் கண்டேன்
மார்கழி உந்தன் அருகில் கண்டேன் - உன்
பக்கம் இருக்க கனவு கண்டேன் –என்
பாதம் உந்தன் பின்னே கண்டேன்- உன்னால்
சலனம் கொள்ளும் மனதை கண்டேன்
சாகவும் துணிந்த நெஞ்சம் கண்டேன்
விடையை கேட்டு வினாவை தந்தேன்
வீதியில் அது விரையக் கண்டேன்
யன்னல் வழி நிலவே உன்னிடம் – நான்
யாசகம் செய்யும் நிலையை கண்டேன்.... | |
|