~~பிச்சை எடுத்து மகளை என்ஜினீயரிங் படிக்க வைக்கும் ஊனமுற்றவர்~~
Author
Message
ApsarA
Posts : 661 Join date : 2012-01-26 Location : ~~WonDerLanD~~
Subject: ~~பிச்சை எடுத்து மகளை என்ஜினீயரிங் படிக்க வைக்கும் ஊனமுற்றவர்~~ Fri Apr 20, 2012 8:04 pm
ஊனமுற்ற ஒருவர் தன் மகளை பிச்சை எடுத்து என்ஜினீயரிங் படிக்க வைக்கிறார். அந்த மாணவிக்கு மதுரை கலெக்டர் சகாயம் லேப்-டாப் வழங்கினார். புதுக்கோட்டை பூங்காநகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் கடந்த 86-ம் ஆண்டு நடந்த ரெயில் விபத்தில் தனது வலது காலை இழந்தார். ஆனாலும் ஒற்றைக்காலுடன் தன்னால் இயன்ற வேலையை செய்து பிழைத்து வந்தார். அவருக்கு 91-ம் ஆண்டு அவருக்கு திருமணம் நடந்தது. மனைவி பெயர் லீலாவதி. புதுக்கோட்டையில் குடும்பத்துடன் வசித்து வந்த அவருக்கு 93-ம் ஆண்டு வள்ளிமயில் என்ற மகளும், 95-ம் ஆண்டு சுந்தரவல்லி என்ற மகளும் பிறந்தனர். ஆரம்பத்தில் குறைந்த வருமானத்தில் செம்மையாக குடும்பத்தை ஓட்டிவந்த அவரால் குழந்தைகள் பிறந்த பின் போதிய வருமானம் இல்லாமல் அவதிப்பட்டார். இதற்காக அவர் மட்டும் மதுரை வந்து ஓட்டலில் வேலை பார்த்தார். ஆனால் ஊனமுற்ற அவரால் சரியாக வேலை செய்ய முடியவில்லை. குழந்தைகள் படிக்க வேண்டிய காலம் நெருங்கியது. வயிற்றுப்பிழைப்பு மட்டும் என்றால் எப்படியாவது நடத்தி விடலாம், ஆனால் குழந்தைகளை எப்படி படிக்க வைப்பது என சிந்தித்தார். சுய கவுரவத்தை விட்டு மகள்களின் படிப்புக்காக மதுரை பெரியார் பஸ் நிலையத்திலும், வீதி-வீதியாகவும் உதவி கேட்க ஆரம்பித்தார். போவோர் வருவோரிடம் தன் குழந்தைகளின் படிப்புக்காகத்தான் இப்படி யாசகம் பெறுகிறேன் என்று கூறியே பணம் கேட்டார். நல்ல உள்ளங்களின் உதவியால் தற்போது அவருடைய மூத்த மகள் புதுக்கோட்டையில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.இ. படிக்கிறார். அடுத்த மகள் பிளஸ்-1 தேர்வு எழுதியுள்ளார். யாசகம் பெற்று பிள்ளைகளை படிக்க வைத்தாலும் அது போதுமானதாக இல்லை. இதற்காக பலரிடம் கடனும் வாங்கியுள்ளார். இந்த நிலையில் மதுரை பாரதி யுவகேந்திரா மற்றும் தமிழ் அரிமா சங்கம் சார்பாக ரூ.8 ஆயிரம் அவருக்கு வழங்கப்பட்டது. அப்போது ரவிச்சந்திரன் தனது என்ஜினீயரிங் மகளுக்கு ஒரு லேப்-டாப் வழங்கினால் படிப்புக்கு உதவியாக இருக்கும் என்று கோரிக்கை விடுத்தார். இதனை அடுத்து பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு முயற்சியால் தொழில் அதிபர் வாலாந்தூர் பாண்டியன் ரூ.35 ஆயிரம் மதிப்பில் ஒரு லேப்-டாப் வழங்கினார். அதை, மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் நேற்று மாணவி வள்ளிமயிலுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தொழில் அதிபர் வாலாந்தூர் பாண்டியன், நெல்லைபாலு, மாணவியின் தந்தை ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது கலெக்டர் சகாயம், மாணவிடம், "படிப்பது தொடர்பாக எந்த உதவி வேண்டுமானாலும் செய்வேன்" என்று கூறினார்.
~~பிச்சை எடுத்து மகளை என்ஜினீயரிங் படிக்க வைக்கும் ஊனமுற்றவர்~~