AruN Admin
Posts : 1961 Join date : 2012-01-26
| Subject: ~~நண்பனே கேள் ~~ Tue Apr 24, 2012 1:10 pm | |
| நண்பனே கேள் கண்களில் நீர் பெருகிக் கன்னங்களை நனைக்க கடற்கரையில் நின்றிருந்தான் கார்த்திகேயன் இளங்கலை இறுதியாண்டுத் தேர்வு எழுதிய இளங்காளை அவன்.
காதல் தோல்வியா...இல்லை.... காதல் வெற்றியால் கல்வியில் கண்ட தோல்வி இது.
காவ்யாவைக் கண்ட நாள்முதல் கனவிலும் நனவிலும் அவளே என்றிருந்து காதலைத் தந்து பின் பெற்று, களிப்பு மிகவாகிக் கடமையை மறந்தான் கல்வியைத் துறந்தான்.
உடலளவில் மட்டும் வகுப்பில் அவன் இருக்க உயிரும் மனமும் 'காவ்ய' உலகில் சஞ்சரிக்க தேர்வு முடிவு வெளியானபோதுதான் சோர்ந்துபோனான் தோல்விகண்டு.
தூற்றினர் எல்லோரும் தேற்றுவார் எவருமில்லை துயரம் என்னவென்றால்... தோற்றது தேர்வில் மட்டுமல்ல தன் உயிரான காதலிலும்தான்- துளியேனும் தயங்காமல் தூக்கியெந்தாள் அவன் காதலை -அவன் கல்வியில் தோற்றதால்.
உயிர் நண்பன் என்றிருந்த ஒருவனும் ஊரில் இல்லை- ஆறுதல் சொல்ல.
விரக்தியின் விளிம்புக்கே சென்றான் வீட்டுக்குள்ளே அடைந்து கிடந்தான் உணவில்லை உறக்கமும் இல்லை ஓரிரு நாட்கள் ஓடின.
மாலை மயங்கிய அந்த நேரம் வாழ்வைச் சந்திக்கப் பயந்த அவன் சாவைச் சந்திக்கப் புறப்பட்டான்.
கடலலைகள் காலை நனைத்து நனைத்துச் சென்றன கற்சிலையெனெ நின்றிருந்தான் கார்த்திகேயன் மனதில் பொங்கிய துக்க அலைகள் உந்தித்தள்ள மெல்ல கடலன்னையை நோக்கி நடந்தான்.
சில அடிகளே சென்றிருப்பான்.. ஐயகோ.. கண்முன்னே.. சீறிப் பாயும் கடலலைகள்.. ஆளுயரத்திற்கும் மேலே.. சித்தம் தடுமாறிப் போனான். மரணபயம் ஆட்கொள்ள... மனம் மாறி மணற்பரப்பை நோக்கி ஓடினான்.
மூச்சு வாங்க ஓடிவந்து.. மணல்மேட்டில் அமர்ந்து முழங்கால்களில் முகம் புதைத்து அழத் தொடங்கினான்.
"கார்த்தி .. என்னடா இது ...? ..என்ன ஆயிற்று ? " குரல் கேட்டுத் திடுக்கிட்டு நிமிர்ந்தான்- அங்கே ..உயிர்த் தோழன் தினேஷ் .
தோழனின் தோள்மேல் சாய்ந்து துயரமெல்லாம் கொட்டித் தீர்த்தான். ஆதரவாய் அவன் முதுகைத்தடவியபடி அமைதியாக் கேட்டிருந்தான் தினேஷ்.
மென்மையான குரலில் பேச ஆரம்பித்தான்: " உன் நிலை கண்டு வருந்துகிறேன் நான்- ஆனால் .. கார்த்தி .. நான் சொல்வதை அவசியம் நீ கேட்க வேண்டும் .."
விசும்பல்களே பதிலாய் வந்தன .. தொடர்ந்தான் தினேஷ் . . " யாருக்குத்தான் பிரச்சினை இல்லை ? சாவொன்றுதான் தீர்வென்று எண்ணாதே நண்பா உயிர் கொடுத்த இறைவனுக்கே நம் உயிர் எடுக்கும் உரிமை உண்டு , தெரிந்து கொள்.
காதல் என்பது தவறான ஒன்றல்ல - ஆனால் உண்மைக் காதல் நாம் தேடி வருவதல்ல .. தானே நம்மை வந்து சேர்வது - அது உன்னை வந்து சேரும்வரை உறங்கவிடு உன் உணர்வுகளை .
கவனமெல்லம் கல்வியின்பக்கம் திருப்பு கண்டிப்பாக வெல்வாய் அடுத்த முறை . தோல்வி கண்டு துவளாதே- துணிந்து நில் .. தோல்வியே வெற்றிக்கு முதல்படி என்ற நியதியை நினைவில் கொள். துன்பமெல்லாம் தூளாகும் இன்பமேதான் இனிமேல் உனக்கு."
ஆனந்தக் கண்ணீர் நெஞ்சை நனைக்க ஆரத் தழுவினான் ஆருயிர் நண்பனை.
நட்புக்கு இலக்கணம் வகுத்த நண்பனின் கைகோர்த்து வீறுநடை போட்டான் வெற்றிப் பாதையை நோக்கி ! | |
|