என் உயிர் ஜீவனே....!
நீர் வரும் பாதையில் நான் மலர்ந்திடுவேன் உன்னை தாங்கிடதான் நான் உயிர் பெறுவேன்......
நீ பேசும் தமிழ் சொற்களில் ஒளிந்திருப்பேன்
உன் பாசத்தில் மெய் மலர்ந்து உறைந்திருப்பேன்......!
இத்தனை நாட்கள் நான் கண்ட வேதனையெல்லா ம்
நேற்று ஒரு நொடியில் தூளாக செய்த மாயம் என்ன.....!
துயரம் கண்டு நான் சாய்ந்த பொழுதுகளில்
உன் தோல் கொடுத்து தாயாகிய
நேசமன்றோ.......!
கற்பனையிலே இவள் தாமரையாய் இருக்க
இவன் தண்ணீராய் பெருக்கெடுத்து அழகு செர்ப்பதென்ன.....!
கடல் தாண்டி நீ இருக்கும் இந்த நிமிடம்
நம் நட்பின் ஆழத்தை அளவிடும் கருவியும் இல்லை.....!
உன் நட்பின் பாசத்தில் நான் நனைகிறேன்
உன் ஆசை போல் என் நிழலாக எப்போதும்
நீ இருப்பாய்......!
என் கண்களில் வழியும் கண்ணீர்கள்
உன் பாசத்திற்கு ஏங்கும் ஆணிவேர்கள்....!
என் ஜீவன் என்னை விட்டு பிரிந்தாலும்
எனது ஜீவன் காப்பான் என்று இவளும் இருப்பாள்......!!!