AruN Admin
Posts : 1961 Join date : 2012-01-26
| Subject: ~~என்ன சொல்கிறாய் ?~~ Mon Jun 04, 2012 1:52 pm | |
| என்ன சொல்கிறாய்? மத்தளத்திர்க்கோ இரண்டு பக்கம்தான் உதை ஆனால் உனக்கோ எல்லாப் பக்கமும் உதை
உன்னை அடித்தாலும் உதைத்தாலும் மிதித்தாலும் நீ மறுபடியும் அவர்களிடமே செல்கிறாய் அப்படியே தப்பித்து சென்றாலும் மறுபடியும் இதே கதைதான் சென்றவர்களிடமும்..
உனக்கு ஏன் இந்த அவஸ்தை ஒரு ஊசி போட்டாலே போதும் இந்த அவஸ்தை இருக்காதே உனக்கு.. என்ன சொல்கிறாய் என் ஆசைப் பந்தே!
உனக்கும் எங்களுக்கும் ஒரே ஒரு ஒற்றுமை இருவருமே காற்றடைத்த பைதான் ஆனால் உனக்கோ காற்றை திரும்பவும் ஏற்றலாம் ஆனால் எங்களுக்கோ? | |
|