Jaya
Posts : 150 Join date : 2013-07-08
| Subject: சொல்கின்றாய் காதல் .... Wed Jul 10, 2013 1:00 am | |
| . சொல்கின்றாய் காதல் .... உன்னில் எனைக் கோர்க்கின்றேன்
உயிருக்கு உனையே உயிராக்கினேன்
பயிருக்கு மழையாய் உன் வருகை
படைத்தவன் கொடைதான் உன் பார்வை
கொடியில் சுற்றும் கொழுகொம்பு நான்
கோவையின் அழகில் பாவலன் தான்
கண்களின் பார்வையில் காதல் காதல்
கதைகளின் போக்கிலோ மோதல் மோதல்
திங்களின் அழகில் செய்த கன்னம்
தின்ன வா கிள்ள வா எனை கெஞ்சும்
பக்கம்தான் வந்தேன அழகை பருகவென்று
பயத்துடன் கன்னத்தை இளைத்து நின்றேன்
சொரக்கம்தான் உன்னருகே கண்டுகொண்டேன்
சொல்கின்றாய் காதல் கண்ணால் கண்டேன்
கவிதையில் இதற்குமேல் எழுதுவேனா?
கண்மணி உன் கனியிதழில் எழுதுகின்றேன்... | |
|