Jaya
Posts : 150 Join date : 2013-07-08
| Subject: மலரும் ஆண்டு ...... Sat Jul 13, 2013 2:34 pm | |
| . மலரும் ஆண்டு ...... மொட்டவிழும் மலரைபோல் மௌனமாய் ஒர் ஆண்டு மலர்கின்றது மலரும் மலரோ மாயவன் பாததிற்கு மலரும் ஆண்டோ மனிதா உன் கைகளுக்கு
ஆண்டொன்று கிடைத்தது என்று அகமகிழ்ந்து இருக்கையில் நேரமது கரைந்து நாளாகும் நாட்கள் வளர்ந்து கிழமையாகும் கிழமை நகர்ந்து மாதமாகும் மாதங்கள் ஓடி வருடம் முடிந்துவிடும் - அதனால்
மனிதா ! எழுந்திரு கையில் கிடைத்த புத்தாண்டோ கைக்கு கட்டுபட்டு இருப்பதில்லை கை படாவிட்டாலும் இருப்பதில்லை கிடைத்த ஆண்டின் ஒவ்வொரு நிமிடத்தையும் உன்கையில் எடுத்திடு உறங்காமல் செயல்படு
கட்டங்கள் பார்த்து காலம் கடக்கட்டும் என இராமல் திட்டங்கள் வகுத்து திறம்பட செயல்படு சட்டென்று நினைத்து சடுதியாய் இயங்காமல் சற்று யோசித்து சரியான முடிவெடு பட்டென்று உழைத்து பணம் மட்டும் சேர்க்காமல் பற்றுப் பாசத்தோடு பணத்தையும் சேர்த்திடு சட்டென்று உழைத்து சரித்திரம் படைக்க நினைக்கமல் சொட்டு பணத்தில் சுற்றத்தையும் உயர்த்திடு
ஆண்டொன்று பிறந்து அது வளர அதனுடன் சேர்ந்து வயதொன்று வளர்ந்தது என இராமல் மலரும் ஆண்டுடன் மனிதா வாழ்க்கையை வளர்த்து வாழ்க்கையை வாழ்ந்திடு | |
|