Jaya
Posts : 150 Join date : 2013-07-08
| Subject: அம்மா!!!!!!!!!!! Tue Jul 16, 2013 3:33 pm | |
| . அம்மா…….. வைத்தியசாலை அவசரபிரிவு மரணவேதனையில் ஓர் உயிர் ஐனனம் வெளியே வந்த தாதி உங்கள் சேயும் தாயும் நலமென்று உரைத்த இதழ் சேருமுன் ஓடுகின்றன உறவுகள் பூமிக்கு வந்த புதுமுல்லையை பார்பதற்கு
முல்லையது தன் முகத்தை அசைக்கின்றது கிள்ளையவள் அசதியான நிலையிலும் பக்கத்தில் இருந்த பச்சைப்பிள்ளையை கைதொட்டால் பிள்ளை கரைந்துடுமோ என மெதுவாக எடுத்து உச்சி முகர்ந்தாள் உவகை ஆனந்த அழுகை இரண்டும் போட்டி போட மெல்ல எடுத்து மேலாடையுள் மூடினாள் அன்றிலிருந்து அவள் அவதாரம் எடுத்தாள் அம்மாவாக
அம்மா ! இது என்ன மந்திரச்சொல் ஜந்தறிவு முதல் ஆறறிவு உயிர்வரை அம்மா என்னும் உயிர் அதற்காக அன்றி அதன் பிள்ளைக்காக வாழ்கின்றது
சுயநலம் என்னும் சுடு சொல்லை உதறி தன் குழந்தையின் நலம் ஒன்றிலேயே குறியாக இருக்கின்றது
பிள்ளை வளர் அசைவை கண்ணிறைய காண்பதோடு அடுத்தவருக்கு கூறி அகம் மகிழ்வாள் அ என்று குழந்தை அழுதாள் அம்மா சொன்னதாக ஆர்ப்பாட்டம் செய்வாள் அதோ பார் அப்பா என்று அடுக்காய் சொந்தங்களை சொல்லி ஆனந்தப்படுவாள்
பிள்ளை சொல்லும் பிஞ்சு மழலையில் இந்த பிரபஞ்சத்தையே மறப்பாள் குழந்தையது நிமிர்ந்து பூமியில் குங்குமக்கால் வைக்கும் போது – தன் குடும்பமே நிமிர்ந்துவிட்டதாக கூறி மகிழ்வாள்
பச்சைப்பிள்ளையது பள்ளிசெல்லும் வயதானதும் பள்ளிக்குசேர்ந்து பட்டமது வாங்கி தன்னை பாரில் உள்ளோர் போற்றும் வண்ணம் குணத்தினில் உயர்ந்து வாழவேண்டும் என கடவுளி;டம் இறைஞ்சுவாள் தன்சுகம் அன்றி குழந்தையின் சுகம் மட்டுமே குறியாக வாழ்வாள் குழந்தை செய்யும் குறும்புகளை ரசிப்பாள் வளர்ந்த குழந்தையது வஞ்சனை ஏதும் செய்தாலும் வளர்த்த தன்னை குறைகூறி வயிற்றுப்பிள்ளையை குறைகூறாள்
என்ன இருந்தாலும் என்பிள்ளை நல்லாயிருக்கட்டும் என வயிறு பசியால் துடிக்கும்போதும் மனது குளிரச் சொல்வாள்
மனிதனாக பிறப்பதற்கே மாதவம் செய்ய வேண்டுமெனின் மாதாவாக பிறப்பெடுக்க மா பெரும் தவம் செய்தல் வேண்டுமல்லோ
இறைவன் தன் கருணையை இல்லங்கள் தோறும் தாய் என்னும் வடிவில் தந்துள்ளான் மனிதரே நாய் என்னும் ஜிவன் போல் தாயிடம் நன்றியுடன் இருங்கள்
மாடமாளிகை கைநிறைய பணம் கழுத்துநிறைய நகை இதில் ஒர் தாய் நிறைவடைவாள் என விசி எறிந்துவிட்டு நீ நிம்மதி அடைந்து அவளை தவிக்க தனியே விட்டுவிட்டு விலகி இருக்காதே
அவள் அருகில் இருந்து உனக்கு பாலும் சோறுமாய் ஊட்டிவிட்ட கையை எடுத்து அன்புடன் தடவு அது அவளுக்கு அம்மா நான் இருக்கிறேன் உனக்கு என்னும் நற்செய்தியை சொல்லும் எல்லாவற்றையும் விட அன்புடனே அம்மா அம்மா என கூறு அதுவே போதும் அவளுக்கு ஆயிரம் வருடம் ஆனந்தமாய் வாழ்வதற்கு | |
|