Jaya
Posts : 150 Join date : 2013-07-08
| Subject: என்னுசிரே என்னிடம் இல்ல..... Tue Aug 13, 2013 2:37 pm | |
| . என்னுசிரே என்னிடம் இல்ல..... ஏண்டி புள்ள இப்படி சொன்னாய்
என்னுசிரே என்னிடம் இல்ல
கன்னுக்குட்டி குடிச்ச பாலை
கயிற்ற இழுத்து மறுத்தது போல
கடு கடுன்னு பேசிப்புட்ட
கலங்கி போய் நிக்கிறன் புள்ள
சிவத்த சொண்டால
சிந்தைய கொன்னுபுட்டு
சில்லறை கொட்டியது போல
சிரிச்சு மயக்கிப்புட்டு
ஏண்டி புள்ள இப்படி சொன்னாய்
என்னுசிரே என்னிடம் இல்ல
நெஞ்சுக்குள்ள நீ நிறைஞ்சிருக்க
நெனப்பால நான் தொலைஞ்சிருக்க
நெனக்க முடியாத வார்த்தைய நீ
நெசமாத்தான் சொன்னியோ புள்ள
நெல்மணியா சேர்த்து வைத்த நெனப்பெல்லாம்
நெருப்பா இப்ப சுடுகுது புள்ள
வேண்டாத வார்த்தை போட்டு
வெடுக்கென்று சொல்லிபுட்ட
வேர் உழுத்த மரம் போல
வேசத்துக்கு வாழ்றன் புள்ள
ஏண்டி புள்ள இப்படி சொன்னாய்
என்னுசிரே என்னிடம் இல்ல
என்னத்த சொல்லிப்புட்ட
சின்ன குழந்த போல
ஏதோ சொல்லிப்புட்ட
வீட்டை நெனச்சுக்கிட்டு
வெளிவேசம் போடாத
வேசத்தை கலச்சுப்புட்டு
வெளிச்சத்துக்கு வா புள்ள
வாழ்க்கை எவ்வளவு சுவைன்னு
வாழ்ந்து பார்த்திடுவம் வா புள்ள
அரிசிமா புட்டு வச்சு
அதுக்கு நல்ல மீன் குழம்பு வைச்சு
அடுப்படியில நீ பரிமாறினா
அதில இருக்கு புள்ள சந்தோசம்
அதவிட்டுபுட்டு ஆரும் ஏதும் சொன்ன
அதபோட்டு குழப்பிக்கிட்டு
என்னையும் குழப்பாத புள்ள
ஆலமரத்து விழுதுபோல என் ஆச பெருகிவர
அதில நெருப்பு வைக்கிறியே புள்ள
அட சொல்லிறத கேட்காம
சொர்கத்த வெறுக்கிற புள்ள
சொர்கத்த வெறுக்கிற புள்ள
சொல்லிறத கேட்காம... | |
|