Jaya
Posts : 150 Join date : 2013-07-08
| Subject: தந்துவிட்டாள் என்னிடம் ..... Wed Aug 21, 2013 2:04 am | |
| . தந்துவிட்டாள் என்னிடம் ..... நின்னை நான் ரதியென்பேன்
நீதான் என் கதியென்பேன்
புன்னை மர நிழலினிலே
பூவைக்காக காத்திருப்பேன்
கண்ணை அவள் பெரிதாக்கி
காதல் அதை உருவாக்கி
என்னை அவள் கவியாக்கி
ஏஞ்சல் அவளை பாவாக்கி
தென்னை மர காற்றாகி
தீண்டி தீண்டி வருடுகின்றாள்
அன்னை அவள் பாசமெல்லாம்
அள்ளி அள்ளி தருகின்றாள்
மண்ணை வெல்லும் அழகி –என்
மனதை வென்று ஓடுகின்றாள்
வெண்ணை திருடும் கண்ணணை போல் –நான்
வேண்டுவன கேட்டிறஞ்ச
தன்னை அவள் நூலாக்கி
தந்துவிட்டாள் என்னிடம்
படிப்பதற்கு... | |
|