Jaya
Posts : 150 Join date : 2013-07-08
| Subject: உன் செல்லம் நானல்லவா... Wed Oct 02, 2013 2:25 pm | |
| . உன் செல்லம் நானல்லவா... அப்பாவும்
அம்மாவும் வேலைக்கு
அப்பத்தா ஊர் கதை பேச - என்னை
பார்க்க வந்த அன்ரி
பார்க்கின்றா TV
அழுது பார்த்தேன்
ஆரும் வரவில்லை
வருவது வரட்டும்
பசிக்கின்றது என்ன செய்ய
நானே தொடங்கி விட்டேன்
பத்து சோறு எடுத்து
பக்குவமாய் வாய்க்குள் வைப்பேன்
வருவது என்னவோ இரண்டுதான்
மிச்சமெல்லாம் என் மேனியில்
இதுதான் என் சாப்பாடு
அம்மா மட்டும் வீட்டில் இருந்தா
கண்ணே மணியே என்று
கதைசொல்லியல்லவா சோறூட்டுவாள்
என்னதான் பணம் சேர்த்தாலும்
என்னருகே அம்மா இல்லை
என்ற ஏக்கம்
எனக்கு
அம்மா அருகிருந்து
சோறும் சொதியுமென்றாலும்
அன்புடன் ஊட்டுவது
அகிலத்தில் எதற்கு ஈடு
நானும் பிச்சைக்காரன்
அத்தனை செல்வமும் இருக்கின்றது
அன்பு தவிர
அன்புக்காக ஏங்கும் எனக்கு
அம்மா குவிக்கும் பொருள் வேண்டாம்
அவசரம் இல்லாமல் ஆரத்தழுவி
அன்புடன் கதை சொல்லம்மா
அது போதும் எனக்கு
நீ
எனக்காக குவித்த அத்தனைக்கும்
ஈடாகும்
அம்மா
ஏன் உனக்கு இது புரியவில்லை?
அம்மா
உன் செல்லம் நானல்லவா
உன் செல்வமும் நானல்லவா
செல்லமும் செல்வமுமான
என்னை விட்டு
எங்கே செல்கின்றாய்?
நீ | |
|