மனிதனை வசியமாக்கும்
அற்புத கலை
இரண்டு மனம் சேர்க்கும்
வசிய கலை
அசாத்திய துணிச்சலை கொடுக்கும்
வீரக் கலை
பொய்யை உண்மையாக்க முயற்சிக்கும் பித்தலாட்ட கலை
ஒருவரை காதலித்து இன்னொருவரை மணக்கும்
ஏமாற்றும் கலை
காதலியிடமே சீதனம் கேட்கும்
கோழை கலை
ஒரே நேரம் இருவரை காதலிக்கும் இரட்டை வேட கலை
இன்று காதல் நாளை காமம் என்றழையும் துரோக கலை
கடவுளிடமே காதல் நிறைவேற வரம் கேட்டு அவன் முன்னேயே இன்னோருவனுக்கு கழுத்தை நீட்டும்
பக்தி கலை
தான் காதலித்து மணமுடித்ததை மறந்து தன் பிள்ளையின் காதலை எதிர்க்கும்
பாச கலை