Jaya
Posts : 150 Join date : 2013-07-08
| Subject: சளித்தொல்லை நீங்க சிறந்த மருந்து இயற்கை மருந்து;- Tue Jul 09, 2013 1:13 am | |
| . சளித்தொல்லை நீங்க சிறந்த மருந்து இயற்கை மருந்து;- * எலுமிச்சை சாற்றில் உப்பு சேர்த்து குடித்தால் சளியால் ஏற்படும் வாந்தி நிற்கும்.எலுமிச்சை பழச்சாற்றை காபியில் கலந்து குடிப்பதன் மூலம் தலைவலி தீரும். எலுமிச்சை இலைகளை தேநீரில் போட்டு கொதிக்க வைத்துக் குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.
* கடல் அழிஞ்சில் பட்டை, திப்பிலி, தாளிசபத்திரி மூன்றையும் சம அளவில் எடுத்து பொடி செய்து இரண்டு கிராம் பொடியை தினமும் இரண்டு வேளை தேனில் குழைத்து சாப்பிடலாம். சளி, இருமல், தும்மல் மற்றும் அலர்ஜியில் இருந்து தீர்வு கிடைக்கும்.
* கடுகை பொடி செய்து தொண்டையில் பற்றுப் போட்டால் தொண்டை வலி குணமாகும். அரைக் கீரை தண்டுடன் மிளகு, மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து கஷாயம் வைத்து தினமும் அதிகாலையில் குடித்தால் சளி, இருமல் மற்றும் நுரையீரல் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
* அறுவதா இலையுடன் ஒரு துண்டு இஞ்சி சேர்த்து அரைத்து சாப்பிட்டால் மார்பு சளி குணமாகும். ஆடாதொடா இலையை பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டால் சளித் தொல்லை தீரும்.ஆலமர விழுதை பொடி செய்து காலை, மாலையில் சாப்பிட்டால் இருமல் குணமாகும்.
ஆவி பிடித்தல் >> தொண்டை சளி இறுகி இருந்தால், அப்போது சூடான நீரில் ஆவி பிடித்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
தண்ணீர் >> கபம் மற்றும் சளியை தளர்த்த வேண்டுமெனில், தினமும் குறைந்தது எட்டு டம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும். இது உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.
சுத்தமான மூக்கு >> தொண்டையில் சளி தேங்காமல் இருக்க, மூக்கினை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.
உப்புத் தண்ணீர் சளி இருக்கும் போது, வெதுவெதுப்பான தண்ணீருடன் உப்பைச் சேர்த்து அடிக்கடி வாய் கொப்பளிக்க வேண்டும். இதனால் தொண்டையில் உள்ள கிருமிகள் அழிந்து, தொண்டை கரகரப்பு நீங்கும்.
யூகலிப்டஸ் எண்ணெய் கபத்தைத் தளர்த்தவும் மற்றும் சளியின் இறுக்கத்தை போக்கவும், சிறிது யூகலிப்டஸ் எண்ணெயை வெந்நீரில் சேர்த்து ஆவி பிடித்தல் நல்லது.
உணவுகளில் கவனம் தேவை சளியை அதிகரிக்கும் பால் பொருட்கள், இறைச்சி அல்லது வறுத்த உணவுகள் போன்றவற்றை தவிர்க்கவும்.
மூலிகைத் தேநீர் சளியை குணப்படுத்த மூலிகைத் தேநீர் அல்லது கோழி சூப் போன்றவற்றை சூடாக பருகினால், தொண்டை இதமாக இருக்கும்.
மஞ்சள் தூள் சளி இருக்கும் பொழுது, அரை டம்ளர் பாலுடன், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து பருக வேண்டும். ஏனேனில் மஞ்சள் தூளில் கிருமி நாசினிகளின் பண்பு அதிகமாக இருப்பதால், அதனைக் குடிக்கும் போது, தொண்டையில் உள்ள கிருமிகள் அழிந்துவிடும்.
எலுமிச்சை மற்றும் தேனை பயன்படுத்த வேண்டும். சூடான நீரில் இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து பருகவும். இதனால் தேன் தொண்டைப் புண்ணை ஆற்றவும், எலுமிச்சை சளியை குறைக்கவும் உதவுகின்றது.
சிகரெட் வீட்டை சுத்தம் செய்ய பயன்படுத்தும் க்ளீனர்கள், பெயிண்ட், இரசாயன பொருட்கள் அல்லது சிகரெட் புகை போன்றவற்றிலிருந்து விலகியே இருக்க வேண்டும்.
தொண்டை எரிச்சல் மற்றும் சுவாச கோளாறுகளை ஏற்படுத்தும் புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால், உடனே அதனை நிறுத்தி விட வேண்டும்.
காரமான உணவுகள் காரமான உணவுகளை சாப்பிட வேண்டும். ஹார்ஸ் முள்ளங்கி அல்லது ஹாட் சில்லி பெப்பர்ஸ் போன்ற உணவுகளை உட்கொள்வது சளி இறுகுவதை தவிர்க்கும். | |
|