Jaya
Posts : 150 Join date : 2013-07-08
| Subject: ”புயலை தாண்டினால் தென்றல்” Wed Aug 21, 2013 11:01 pm | |
| . ”புயலை தாண்டினால் தென்றல்” புயல் !
சொன்னால்
தெரியாது
அதன் வீரியம்
அனுபவித்தால் தான் தெரியும்
புயல் !
வாயு தேவனின்
கோரத்தாண்டவம்
புயல் !
உலகின்
அழகு முதல் எல்லாவற்றையும்
உலுக்கி எடுக்கும்
ஆயுதம்
எமது மண்ணில்
புயல்
ஆமாம் பெரும் புயல்
புயலால்
புழுதி பறக்கும்
பொருட்கள் தூக்கி
வீசப்படும்
எம் மண்ணில்
புது விதமான புயலில்
இரத்த ஆறு ஓடியது
இரத்த காட்டேறிகள் அதை
ரசித்து ருசித்து
தாண்டவமாடி மகிழ்ந்தன
எத்தனை
பூந்தளிர்கள்
மண்ணில் வீழ்ந்தன
எத்தனை இளம்
பூவையர் பூக்கள்
மறைந்தன
மறந்தன
மறைக்கப்பட்டன
அத்தனையும் உண்மை
அனைவருக்கும் தெரியும்
அட டா
எனக்கு தெரியாதே
என்று சொல்ல
இருளிலும் நடக்கவில்லை
இருவருள்ளும் நடக்கவில்லை
இரத்ததில் குழைந்தது எம் மண்
இரஞ்சி கதறினோம்
காப்பாற்றுங்கள் என்று
இருகரம் கூப்பி
அழைத்தோம்
இரக்கமின்றி இருந்தது
அண்டை நாடு முதல்
அகிலம் வரை
என்ன செய்வோம்
புயலுக்கு பயந்து
ஓடத்தான் வேண்டும்
நாமும் ஓடினோம்
ஓடிய எமக்கு
அபயம் தருவதாக
அழைத்தது
இரத்த காட்டேறி
தெரிந்தும் சென்று
அடைக்கலம் தேடினோம்
அபயகரத்தினுள்
வேறு வழி
எம்மிடம் இருந்து
அபகரிக்கப்பட்டது
மானம் முதல் அத்தனையும்
”புயலை தாண்டினால் தென்றல்”
தென்றல்
எத்தனை இதமானது
சுகமானது
பனிகால தென்றலில்
பதுங்கி இருக்கும் சுகம்
சொல்லில் அடங்கா
தென்றல்
தேவதைகளின்
மூச்சுக்களால் மீட்டப்படும்
இதமான பூபாள ராகம்
ஆமாம்
எம் மண்ணிலும்
தென்றல் தானே வீசுகின்றது
அதுவும்
புயலின் பின்னான தென்றல்
இத் தென்றலின் சுகத்தை
அனுபவிக்கும் நாம்தான்
சொல்லவேண்டும்
வருபவர்க்கு
காப்பெற் றோட்டுகளில்
கார்களில் பவனி
எத்தனை அருமையாக
புயலின் பின்னான தென்றல்
இம் மண்ணில் என
நினைப்பீர்கள் மகிழ்வீர்கள்
உண்மையில்
எம் மண்ணில்
தென்றல்
தேவதைகளின் வேடம் தாங்கியவர்களின்
அக்கினி
மூச்சுக்களால் மீட்டப்படும் ஓர்
முகாரி ராகம் தான்
இத் தென்றலில்
நாம்
அழிந்தால் முடிந்துவிடும்
எல்லாம்
ஆனால் நடப்பது
நம்மை அழிக்கவில்லை
உயிருடன் தான் இருக்கின்றோம்
அங்கவீனப்படுத்தப்பட்டு
அலங்கோலப்படுத்தப்பட்டு
எமது நிஜம் பறிக்கப்பட்டு
முகம் சிதைக்கப்பட்டு
பதவிகளில் வைக்கப்பட்ட பாவைகளாக
நடைப்பிணங்களாக
நல்லவர்களிடம் வாழ்கின்றோம்
உண்மையில் நாம் எல்லாம்
முத்திரைகள் கிழிக்கப்பட்டு
முகவரிகள் கரைக்கப்பட்ட
தாபல்கள் தான்
எம் மண்ணில்
”புயலை தாண்டினால் தென்றல்”
என்பது
புயலை விட அழிவை
யாருக்கும் புலப்படாமல்
இதமாக பதமாக சுகமாக
செய்கின்றது.... | |
|