Jaya
Posts : 150 Join date : 2013-07-08
| Subject: வேண்டுவன தருவேன் உன்னிடம் Wed Aug 21, 2013 11:02 pm | |
| . வேண்டுவன தருவேன் உன்னிடம் விரல் கொண்டு நீ மீட்டுகின்றாய்
விடை தருமோ என் மனம்
கடலின் ஆழம் என் மனம்
கவிகொண்டு என்னை வீழ்த்துகின்றாய் -என்
இடை விட்டு கை எடுத்துவிட்டு
இடை வெளி விட்டு இருந்துவிடு
தாய்வீட்டு சீதனம் என் மானம் -நான்
தரணியில் வாழ்வதற்கு அது தான் தாரக மந்திரம்
அழகிய கொடி நான் அதில் அள்ளத்தூண்டுவது ஏராளம்
அழகு என்ற சொல் எனக்கு சாதாரணம் உன்
அன்பு தான் எனக்கு மூலாதாரம்
கொடிதனை அணைக்கும் கொழு கொம்பு நீ- என்
கொற்றவனே கோபப்படாமல் சொல்வதை கேளடா நீ
மேளமதை வரச்சொல்லு மெய்சிலிர்த்திருப்பேன்
உன்னிடம்
வேதமதை ஓதச்சொல்லு வேண்டுவன தருவேன்
உன்னிடம் | |
|