Jaya
Posts : 150 Join date : 2013-07-08
| Subject: அவன் கண்டதென்ன? Fri Aug 23, 2013 12:49 am | |
| . அவன் கண்டதென்ன? மனமது தெளிந்த நீரோடையாக
நீரலைகள் ஏதுமின்றி
நிம்மதியாக அவன் இருக்க
பெரும் கல் ஓன்று
வீழ்ந்தது போல்
மனம்
கொந்தளித்து தவிப்பதென்ன?
பிரிவு மறப்பதற்கு நல்ல
மருந்து என்று அவன் இருக்க
பிரிந்த பின்பு நினைப்பு
பிரியாமல் இருந்து
அவனை
கொல்வதென்ன?
கொட்டும் தேள் போல்
கொடிய விஷம் ஓன்று
மனதுள் இருந்து
விட்டு விட்டு கொட்டி
மனதை வேதனையில்
ஆழ்த்துவதென்ன?
எந்த சலனமும் இன்றி
இத்தனை காலம் கடந்து செல்ல
அந்த இரு விழிகளில் மட்டும்
அவன் கண்டதென்ன? | |
|