Jaya
Posts : 150 Join date : 2013-07-08
| Subject: காதல் போதும் என்று தோன்றும் வரை Thu Sep 12, 2013 8:04 pm | |
| . காதல் போதும் என்று தோன்றும் வரை காதல் ஓர் பூவானால்
காதல் செய்யும் உள்ளம்
பூ மரமாகும்
பூ மரத்தில்
பூ மலர்கின்றது
காயாகி கனிகின்றது
பூக்கள்
சில உதிர்கின்றன
சில காயிலேயே மறைகின்றன
ஆனால்
பூ மரம்
மறுநாளோ
சில நாளிலோ
வேறு பூவை பூக்கின்றது
இது போல் தான்
உள்ளத்தில் தோன்றும் காதலும்
உறுதியாக இருந்து வாழலாம்
இல்லை
உடனேயும் உதிர்ந்தும் போகலாம்
உள்ளமே !
உடனே உதிர்ந்துவிட்ட மலருடன்
உன் வாழ்க்கை முடிந்தது
உன்னிடம் இருந்து மலர்கள் தோன்றாது
என்ற வாதத்தை விட்டு
உன் சக்தி கொண்டு
அதிலிருந்து மீண்டு
அடுத்த
பூ மலர்வதற்கு ஆயத்மாகிவிடு
உள்ளமே !
நீயோ ஓர் அழகிய
பூ மரம்
உன்னிடம் இருந்து
மலர்கள் மலர்ந்துகொண்டே இருக்கும்
மலர் ஓன்று நிலையாக இருந்து
உனக்கு அழகு தரும்வரை
உண்மையில்
உள்ளம் என்னும் பூமரம்
காதல் என்னும் மலர்களை
மலர்ந்து கொண்டே இருக்கும்
தனக்கு போதும் என்று தோன்றும் வரை | |
|