தமிழ் தமிழ் தமிழ்
கற்காலம் முதற்கொண்டு,
களங்கள் பல கண்டு,
கடந்த காலங்கள் எல்லாம் வென்ற,
கருவறை மொழியாம் நம் தமிழ் மொழி......
கோள் கொண்டு ஆண்ட அரசர்கள் யாவரும்,
வாள் கொண்டு நாடுகள் வென்ற போதிலும்,
தோள் கொடுக்க மறந்ததில்லை,
எம்மொழி வாழ......
சொற்கவிகள் வாய்மொழியில்,
சுழன்றது முத்தமிழும்......
பொறி பட்டுத் தெறிக்கும் இயற் தமிழும்,
கட்டுக்கடங்கா இசைத் தமிழும்,
கலை கட்டிக் காக்கும் நாடகத் தமிழும்,
எட்டுத் திக்கும் பரவிற்றது,
எங்கள் செந்தமிழ் நாட்டினிலே......
இன்பத் தமிழ்ச் சாறு பிழிந்து,
இதயம் ஓடும் உதிரச் சாறு கலந்து,
இசைந்திடும் உயிர்ச் சாறு குழைத்து,
தமிழர் தேகமெங்கும் ஓடச் செய்வோம்,
தமிழுயிர் உதிரத்தை......
தொன்மைக் காப்பின், தொல்காப்பியன் எழுத்து தொடங்கி,
வாய்மொழி வேந்தன் வள்ளுவன் மொழி நடந்தேறி,
காலங்கள் பல கடந்தும்,
சொல் வித்தகர்கள் பலர் வாழ்ந்தும்,
வெல்ல வைப்பர்,
எம் தமிழ் மொழியை......
பின் வந்த மொழிகள் நலிந்தும்,
அந்நாள் முதல் செழித்து,
இந்நாள் மொழிந்தது போல்,
எந்நாளும் அழியாதது,
எங்கள் செம்மொழியே......
சிசுக்கள்....
பிடித்து நடக்கும் நிலை முதல்,
பகைகளை.....
அடித்து ஒடுக்கும் கலை பயிற்றுவிப்பாள்,
வீரத்தமிழ் அன்னை.......
இன்று.....
ஆட்சி மொழி தமிழாயினும்,
ஆள்பவர்கள்,
அடக்கும் மொழியும் அதுவே......
அமிழ்தம் வழியும் தமிழ் மொழி,
என்று உரைக்கும் காலம் சென்று.....
மெல்ல அழியும் அமிழ்த மொழி,
என்று இகழும்காலம் வந்தும்......
சொல்லில் செழித்து,
வில்லாய் விரைந்து,
திடக் கல்லாய்,
வரும் காலங்கள் நிற்கும்,
எங்கள் வீரமொழி.....!!!!!!!!!
Naan thamizhan, neengal: Sathiya......