Jaya
Posts : 150 Join date : 2013-07-08
| Subject: சிவராத்திரி என்றால் என்ன? Mon Sep 23, 2013 8:04 pm | |
| . சிவராத்திரி என்றால் என்ன? இன்று
சிவராத்திரியாம்
அப்படின்னா என்னடா?
எனக்கும்
தெரியாதடா?
கோவில்
வந்த ஐயாவிடம்
ஐயா !
ஐயா !
கத்தை ரூபாக்களில்
பத்து ரூபா ஓன்றை
நீட்டுகின்றார்
வேண்டாம் ஐயா
வேண்டாம்
ஐயாவின் கண்கள்
கேள்வியாய் நோக்க
சிவராத்திரி என்றால் என்ன?
ஐயா !
கேள்வியாய் நோக்கியவர்
வியப்பாக நோக்கினார்
உனக்கெதற்கடா அது
கேள்வியும் வந்தது
கேட்டால் தப்பா ஐயா
தப்பொன்றும் இல்லையடா தம்பி
ஆசைப்பட்டு கேட்கின்றாய்
சொல்லுகின்றேன் கேள்
பகல் முழுவதும்
விரதம் இருந்து
இரவு முழுவதும்
சிவ சிந்தையோடு
கண்விழித்து
இறைவனை வணங்கும்
சிவனுக்குரிய நாள்
சிவராத்திரி
என்றார்
சிறுவன் முகத்திலோ
சிந்தனை கோடுகள்
தம்பி..
ஐயா!
சரி நான் போகின்றேன்
ஐயா!
என்னடா
இல்ல
எத்தனை நாள் விரதம் ஐயா
ஓரு நாளடா
அப்படியா ?
ஓரு நாள் விரதம் இருந்து கண்விழித்தால் காணுமா?
பொய் தானே சொல்றீங்க ஐயா..
ஏன்டா நம்பலையா
ஓரு நாள் விரதம் இருந்து கண்விழித்து இருந்தா
சிவன் அருள் கிடைக்குமடா
மறுபடியும் பொய் தானே சொல்றீங்க ஐயா
நாங்கள் எல்லோரும்
கிழமையில் பாதி நாள் விரதமும்
கிழமையில் பாதி நாள் கண்முழித்தும்
தானே இருக்கின்றோம்
சிவனையும் காணோம்
அருளையும் காணோம்
அட அது போகட்டும்
போதுமென்றளவு உணவையும் காணோம்
கடவுளுக்கு விரதம் காசு உள்ளவர்கள்
இருப்பது தான் தெரியுமோ
நாங்கள் விரதம் இருப்பது தெரியாதோ? இல்லை
நாங்கள் இருப்பதே தெரியாதோ?
ஐயா!
பெரியவர்
பதில் சொல்லத்தெரியாது
சிறுவனையே பார்க்கின்றார்
அவர் செவிகளில் மட்டும்
”நாங்கள் விரதம் இருப்பது தெரியாதோ? இல்லை
நாங்கள் இருப்பதே தெரியாதோ?” | |
|