AruN Admin
Posts : 1961 Join date : 2012-01-26
| Subject: ~~கணினி கைதிகள்....~~ Sat Apr 14, 2012 12:42 pm | |
| கணினி கைதிகள்.... அதிகாலை கதிரவனும்... அலையலையாய் தென்றலும்.. இலைகளை முத்தமிடும் பனித்துளி... ஜன்னல் அருகே சிமாசனமிட்டு பாடும் பறவைகள்.....!!
பரபரப்பான வாழ்க்கையில் நாம் பார்வையிலிருந்து தொலைத்துதான் போயின எல்லாமே.....!!
வீட்டு முற்றத்தின் ரோஜா செடி.... மொட்டை மாடி காற்றும் நிலா பெண்ணும்... வளை ஓசையும் வண்ணத்துப்பூச்சிகளும்... குழந்தையின் சிரிப்பும் அழகான கவிதையும்..
இன்னும் எத்தனை எத்தனையோ......!! ரசிக்க தான் மறந்தோம்...
கணினியும் கைப்பேசியும்... நம்மை கைதிகளாகியது.. காலம் சென்றாலும் ........ விடுதலை நம்மக்கில்லை !!
தொலைந்து போனதும்..... ரசிக்க மறந்ததும்.... இவைகளை மட்டும் மல்ல..
நம் வாழ்க்கையையும் தான்.................!!!! | |
|