Posts : 443 Join date : 2012-02-28 Location : Norway
Subject: இறைவன் !!! Tue Apr 17, 2012 9:28 pm
நிரந்திரமாக இன்பத்தை அனுபவித்தவனும் இல்லை நிரந்திரமாக துன்பத்தை அனுபவித்தவனும் இல்லை முதல் கட்டம் வரவு என்றால் அடுத்த கட்டம் செலவு முதல் கட்டம் இன்பம் என்றால் அடுத்த கட்டம் துன்பம் ஒரு கட்டம் அப்படி என்றால் மறு கட்டம் இப்படி ! ஏற்றம் என்பது இறைவன் வழங்கும் பரிசு இறக்கம் என்பது அவன் செய்யும் சோதனை நீ நினைப்பது எல்லாமே நடந்து விட்டால் தெய்வத்தை நம்பவேண்டாம் எப்போது நீ போடும் திட்டம் தோல்வியுருகிறதோ உனக்கும் மேலானவன் அதை நடத்துகிறான் என்பது பொருள் உன் திட்டம் வெற்றி கண்டால் அவன் அனுமதி அளித்து விட்டான் என்பது பொருள் இறைவன் நல்லவர்களை கைவிடமாட்டான் ஆனால் சோதனை செய்வான் என்கிறார்கள் தீயவர்களை ஒரே நேரத்தில் கைவிட்டு விடுவான் என்றால் நல்லவர்களை மட்டும் ஏன் கைவிடாமல் இருக்க வேண்டும் நம்மையும் கைவிட்டு விட்டு விட்டால் நாமும் சந்தோசமாக ஏதும் அறியாமல் செல்லலாம் அல்லவா !
என்றும் அன்புடன் "நட்புக்காக" இன்று மட்டும் "சோதனைக்காக"