AruN Admin
Posts : 1961 Join date : 2012-01-26
| Subject: "~~கவிஞன்~~" Thu Apr 19, 2012 12:47 pm | |
| கவிஞன் மழைமேகங்கள் திரளக்கண்டு வெட்டவெளியில் நின்றான் தனியாக கருத்து இருண்ட மேகத்தினின்று புறப்பட்டு உருண்டு திரண்ட ஓர் நீர்த்துளி கூறியது- "நான் கடலாவேன்." காற்று கூறியது- "நான் உன்னை வழிநடத்துவேன்."
முகில்கள் முழவு கொட்ட, மின்னல் தீபம் ஏந்த, மழைத்துளி விரிந்து பரந்து மாரியெனப்பொழிய, மக்கள் குடையினுள்ளும் கூரையினுள்ளும் ஒளிய-
மழையின் ஒளிக்கூத்தினை, மின்னலின் ஒளிச்சிதறலை, காற்றின் இசைக்கூட்டலை, ரசித்து, தனியாய் நின்றவன் செவியில் விழுந்த மழைத்துளி காதோடு கூறியது, "நான் கடலாகிவிட்டேன்" என்று தனித்து நின்றவனை தலை அசைத்துப் போற்றின மரங்கள், "நீதான் ரஸிகன், நீதான் கவிஞன்," என்று. | |
|