கண்ணெதிரே அடி பட்டு
கிடக்கும் மனிதன்
கண்டும் காணததாய்
செல்லும் மிருகங்கள்
என்ன உலகம் இது
காக்கை கூட
தன் இனத்திற்கு
துன்பம் என்றால்
துடித்து உதவும்
ஐந்து அறிவைப் படைத்த
மிருகங்களுக்கும் பறவைகளுக்கும்
இருக்கும் நேயம் எங்கே
போனது மனிதனிடத்தில்
ஒரு பக்கம் மூன்று
மதங்களை கொண்டு
சண்டை போடுகிறான்
மறுப்பக்கம் நாத்தீகம்
பேசும் மனிதன்
இதில் ஜாதிகள்
வேறு எத்தனை
பிரிவுகள் மனிதனிடத்தில்
சந்தில் சிந்து பாடும்
குப்பை அரசியல்
இலவசங்கள்
மனிதனின் உழைப்பை
தடுக்கும் தூண்
ஊழல்கள் பொய்
பித்தலாட்டம் கருப்பு பணம்
ஏமாற்றுவது வசப்படுத்துவது
இதுவே அரசியல்
இனி இதை விட்டு
வைத்தால் விளைவுகள்
பயங்கரம் இதோ
உன் ஆட்டதிற்கு
முற்று புள்ளி வைக்குறேன்
என்று இயற்க்கை தன்
ஆட்டத்தை காமிக்கிறது
பூகம்பங்களும் சுனாமியும்
இனியாவது மனிதனாய் வாழு
மனித நேயம் கொண்டு வாழு
தன்மை மறந்து
பன்மையாய் வாழு
மாறட்டும் இந்த விதி !